• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் பரவும் வைரஸ் காய்ச்சல் இதுவரை 118 பேர் பலி

June 20, 2017 தண்டோரா குழு

கேரளா மாநிலம் முழுவதும் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

டெங்கு, பன்றி காய்ச்சல் என்று கேரள மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.குறிப்பாக திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சின் ஆகிய இடங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் எச்1என்1, டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 4 மாதங்களில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது என்று கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், எச்1என்1, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 250 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமானோர் அரசு மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறும்போது,

காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுற்றுப்புறத் தூய்மையை பேணுமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க