• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனாவால் மரணம் அடைந்த கிராம உதவியாளர் வாரிசுதாரர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கல்

May 3, 2022 தண்டோரா குழு

கொரோனாவால் மரணம் அடைந்த
கிராம உதவியாளர் வாரிசுதாரர்களுக்கு ரூ.25 லட்சம் ஆட்சியர் வழங்கினார்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வடவேடம்பட்டி கிராம உதவியாளர் ரங்கநாதன் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்ததையொட்டி, முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை அவரின் வாரிசுதாரர்களுக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

சூலூர் வட்டம் வடவேடம்பட்டி கிராம உதவியாளர் ரங்கநாதன் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார்.இதனையொட்டி முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை அவரின் வாரிசுதாரர்களான மனைவி,மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு கலெக்டர் சமீரன் வழங்கினார்.

மேலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2021-22ம் நிதியாண்டிற்கு திருநங்கைகள் சுயத்தொழில் துவங்குவதற்கு 6 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.

மேலும் படிக்க