December 29, 2016
தண்டோரா குழு
புதுதில்லியில்பெண் கொள்ளையர்களுக்கு உதவியதாக தலைமைக்காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 9ம் தேதி அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்மணி புதுதில்லிசவாரி பஜார் ரயில் நிலையத்தில் இருந்து குர்கோன் பயணம்செய்த போது அவரிடம் இருந்த விலையுர்ந்த பொருள்களை சில பெண் கொளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை அடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டார். ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அந்த பெண் கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். அதே வேளையில் அந்த பெண் கொளையர்கள் கொள்ளையடித்த பொருட்களின் ஒரு பங்கை ஒரு காவலரிடம் ஒப்படைக்கும் காட்சியும் அதில் பதிவாகி இருந்தது. இதன் மூலம் பெண் கொள்ளையர்கள் தப்பித்துச் செல்ல அந்த காவலர் உதவியது உறுதியானது. இதனை அடுத்து அதற்கு காரணமான பெண் கொள்ளையர்களை காவல் துறையினர் கைத செய்தனர். மேலும் கொள்ளைக்கு உதவிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:
தலைமைக்காவலர் பெண் கொள்ளையர்களுடன் சில பொருள்களை வாங்கும் காட்சி அந்த காணொளியில் இடம்பெற்றதை அடுத்து அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.