• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைஇராமகிருஷ்ணாகல்லூரி மாணவர்கள் இரத்ததானம்

June 14, 2017 தண்டோரா குழு

உலக இரத்த கொடையாளிகள் தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீஇராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

ஓவ்வொரு வருடமும் ஜூன் 14ம் தேதி உலக இரத்த கொடையாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஸ்ரீஇராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகஅறங்காவலர். வி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இராமகிருஷ்ணா மருத்துவமனையின் முதன்மையர் பி.சுகுமார் மற்றும் இயக்குநர்டாக்டர். ஐசக்கிறிஸ்டியன் மோசஸ்ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான விஸ்வநாதன்,பேரா.பிரகதீஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.

மேலும் படிக்க