• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

March 29, 2017 தண்டோரா குழு

தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து கோவை வ.உ.சி மைதானத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் சென்னை மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மெரினாவில் போராட்டம் ஏதும் நடக்கவில்லை என்றும் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மயிலாப்பூர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையிலும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கோவை வ.உ.சி மைதானத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க