• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஃபேஷன் ஸ்பெக்ட்ரா 2022 எனும் தலைப்பில் நடைபெற்ற பேஷன் ஷோ

May 15, 2022 தண்டோரா குழு

கோவையில் ஃபேஷன் ஸ்பெக்ட்ரா 2022 எனும் தலைப்பில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல் பெண்களுடன் குழந்தைகளும் கலந்து கொண்டு, ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

கோவையில் Zetra ஜெட்ரா ஃபேஷன் நிறுவனத்தை நடத்தி வரும் இளைஞர் ஷேக் முகம்மது மாடல் பேஷன் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்.கட்டுமான துறை சார்ந்த ஆர்க்கிடெக்ட் பட்ட படிப்பு படித்து வரும் இவர்,பேஷன் மீது கொண்ட ஆர்வத்தால், தொடர்ந்து பேஷன் துறையில் சாதிக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள கோகுலம் பார்க் ஒட்டல் வளாகத்தில், ஃபேஷன் ஸ்பெக்ட்ரா 2022 எனும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பிரபல தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிர்வாகம் செய்து வரும் இரட்டையர்கள் அருண் அரவிந்த் ஆகியோர் பங்கு பெற்றனர் .சிறப்பு விருந்தினர்களாக ஜே.ஆர்.டி.ராஜேந்திரன் மற்றும் தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடுவர்களாக பிரபல மாடல் சுபா நந்தினி,தொகுப்பாளர் மற்றும் நடிகையான வி.ஜே.கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்ட பேஷன் ஷோ நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை விதவிதமான ஆடை அணிந்து வலம் வந்தனர்.

குறிப்பாக இதில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியரும், வித விதமான வண்ண ஆடைகள் அணிந்த படி மேடையில் ஒய்யார நடை நடந்தனர். முன்னனி மாடல் பெண்களுடன் போட்டி போட்டபடி நடந்த குழந்தை மாடல்களை பார்வையாளர்கள் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.இறுதியில் அனைவருக்கும் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

மேலும் படிக்க