• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

July 7, 2017 தண்டோரா குழு

கோவை ஈச்சனாரி பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் மீது தனியார் கல்லூரி மாணவர்கள் தாக்குதல், காயத்துடன் ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ஈச்சனார் அருகே வரும் போது எதிரே சென்ற பயணிகள் ஆட்டோவை முந்தி சென்றுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதை அடுத்து அங்கிருந்து சென்றமாணவர்கள் கல்லூரிக்கு சென்று சில மாணவர்களை அழைத்து வந்து கல்லூரிவாசலில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த மோகன்ராஜை கம்பி மற்றும் ஹெமெட்டுகளை கொண்டு சராமாரியாக தாக்கி உள்ளனர். இதை தடுக்க சென்ற சில ஆட்டோ ஓட்டுநர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அங்கு வந்த மதுக்கரை போலீஸார் தாக்குதல் நடத்திவிட்டு கல்லூரிக்குள் மறைந்திருந்த மாணவர்கள் இரண்டுபேரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாணவர்களின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக ஆட்டோ ஓட்டுநர்கள் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க