• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே நாளில் 9821 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

April 30, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக வார்டு ஒன்றிற்கு 3 பூத்கள் மற்றும் நிலையம் ஒன்றிற்கு 1 மொபைல் பூத் என்ற அடிப்படையில் மொத்தம் 325 பூத்களில் தடுப்பூசி போடப்பட்டது.

இதில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதே போல் மேற்கு மண்டலம் ஆர்.கே.பாய் நகர் நல மையத்தில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த முகாம்களில் ஒரே நாளில் முதல் தவனை தடுப்பூசி 622 பேர் செலுத்தி கொண்டனர். இரண்டாம் தவனை தடுப்பூசி 3541 பேர் செலுத்தி கொண்டனர், பூஸ்டோர் டோஸ் 2917 பேர் செலுத்தி கொண்டனர்.15-18 வயதுடையவர்கள் 185 பேர் செலுத்தி கொண்டனர். 12-14 வயதுடையவர்கள் 2556 பேர் செலுத்தி கொண்டனர். ஆக மொத்தம் மாநகராட்சி பகுதியில் 9821 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மேலும் படிக்க