• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த முதியவர்… காப்பாற்றிய போலீசார்

September 23, 2022 தண்டோரா குழு

கோவையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த முதியவரை ரயில் நிலைய போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

கோவை மத்திய ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் மூன்றில் கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயில் வந்தது. ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் நிற்பதற்காக மெதுவாக சென்றுகொண்டிருந்தது.அப்போது முதியவர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார்.

எதிர்பாராத விதமாக அவர் தடுமாறி விழுந்த அவர் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரமேஷ் , அருண்ஜித், மினி ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அந்த முதியவரை காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து விசாரித்த போது அவர் சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவரை ஆசுவாசப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். காவலர்கள் தங்கள் உயிரை துச்சமாக நினைத்து முதியவரை காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க