• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காவலர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி

April 1, 2023 தண்டோரா குழு

கோவை மாநகரில் பணிபுரியும் காவலர்களின் நலனுக்காக ஒரு நாள் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாநகர போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றது முதல் போலீசாருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வாகனங்களில் ‘மினி’ நூலகம், போலீசாரின் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக ஒரு நாள் யோகா பயிற்சி நடத்தப்பட்டது.கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தனியார் மருத்துவமனை சார்பில், யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் போலீசாருக்கு மூச்சுப்பயிற்சி, எளிதில் செய்யக்கூடிய யோகாசனங்கள், உடற்பயிற்சிகள் மற்றும் மனநலம் பேணும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் போலீசாருடன் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க