• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

September 21, 2022 தண்டோரா குழு

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. அதன்பேரில் நேற்றைய தினம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் பாலாஜி உத்தமராமசாமி பீளமேடு காவல் நிலைய போலீசாரால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த தகவல் அறிந்த பாஜகவினர் 500க்கும் மேற்பட்டோர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் திரண்டனர். ஏற்கனவே அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து கலையுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அங்கிருந்து கலையாத பாஜகவினர் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவரை விடுதலை செய்யக்கோரி கோவை அவிநாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேரை தவிர்த்து மீதமுள்ளவரை மாலையில் போலீசார் விடுவித்தனர். இதனால் 32 பேரையும் விடுவிக்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க