• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

October 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டெங்கு கொசுகளை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டெங்கு பரவுதலைத் தடுக்க தினந்தோறும் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் செல்லும் இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் அனைத்து நீர்தேக்கத்தொட்டிகளிலும் அபேட் மருந்து ஊற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தெருக்கள்,வீடுகளில் மழை நீர் படும்படி வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட வேண்டும்.பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் படிக்க