• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு – இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

October 13, 2022 தண்டோரா குழு

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், சேரன் காலனியைச் சேர்ந்த சதாம்உசேன் (32) மற்றும் துடியலூர் ஆர்.எஸ்.தோட்டம் , நேரு வீதியைச் சேர்ந்த அகமது சிகாபுதீன் (24) ஆகியோர் கடந்த 22.09.2022 ஆம் தேதி கோவை மாநகர் வி.கே.கே.மேனன் ரோட்டில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு அருகே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக சி 1 காட்டூர் காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், மேற்படி இருவர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி,தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான நகல்கள் கோவை மத்திய சிறையில் மேற்படி இருவருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க