• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெய்த திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம் -வெள்ளத்தில் தத்தளித்தப்படி சென்ற வாகனங்கள்

April 4, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாநகரில் உக்கடம், டவுன்ஹால், கலெக்டர் அலுவலகம் அருகில், அவினாசி சாலை, திருச்சி சாலை கணபதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திடீரென இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. மழைநீர் வடிகால் அனைத்தும் நிரம்பி சாக்கடைகள் நிரம்பி மழை நீருடன் சாக்கடை கலந்து சாலையில், தெருக்களில் ஓடியது.

இதனிடையே கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தின் உள்ளே உள்ள மூங்கில் மரம் ஒன்று சாய்ந்தது. இதே போல் சாலையோரம் உள்ள மர கிளைகள் உடைந்து விழுந்தன.அவினாசி சாலையில் தேங்கிய மழை நீரால் அப்பகுதி வெள்ளம் போல் காட்சி அளித்தது. வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றன.திடீரென பெய்த மழையால் உருவான வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்து சென்றதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர். அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதிகளும் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஊரகப் பகுதியில் பெய்த மழை காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.அதே சமயம் மாநகர் பகுதியில் மழை காரணமாக வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது.குறிப்பாக சிங்காநல்லூர் வரதராஜபுரம், கிருஷ்ண்ணம்ம நாயக்கர் லேஅவுட் பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் சாக்கடை கழிவு நீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.

மேலும் படிக்க