• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 141 பேர் மீது வழக்கு

June 30, 2023 தண்டோரா குழு

0பகோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மது போதையில் வாகனம் ஓட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஒரு வழிப்பாதை, பாதசாரிகளுக்கான குறுக்கு நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கை மாநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,நேற்று முன் தினம் இரவில் இருந்து,கோவை மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
42 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 141 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், தங்களை அழைத்து செல்வதற்கு வசதியாக வாகன ஓட்டிகளை வைத்து கொள்ள வேண்டும்.
மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களின் உரிமையாளர்கள், தங்களின் மதுபானக் கூடங்களுக்கு வருவோர்களிடம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது எனவும், அழைத்துச் செல்ல ஒரு நபரை கூட்டி வரவேண்டும் எனவும், அவ்வாறு, வாகன ஓட்டிகளுடன் வராதவர்களுக்கு, மதுபானக்கூடங்களின் உரிமையாளர்கள் நம்பிக்கையான வாகன ஓட்டிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் என போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க