• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மனநல மீளாய்வு மன்றம் திறப்பு

March 5, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான மனநல மீளாய்வு மன்றத்திற்கான நீதிமன்றம் மற்றும் அலுவலகத்தினை ஆட்சியர் சமீரன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மனநல மீளாய்வு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மையம் மாவட்ட நீதிபதியை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த மீளாய்வு மன்றம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்களுக்கான காப்பங்கள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணித்து ஆய்வு செய்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனை பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மனநலம் பாதிக்கப்பட்டு பராமரிக்க இயலாத நிலையில் உள்ள நபர்களுக்கு அரசு மற்றும் சட்டம் பாதுகாப்பு வழங்கும் என்பதே இம்மன்றத்தின் அடிப்படையான கருத்து ஆகும். நமது மாவட்டத்தில் மனநல மீளாய்வு மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களிலும் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட நீதிபதி மற்றும் மனநல மீளாய்வு மன்ற தலைவர் ஜே.வி.ராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ரவி, மேற்கு மண்டல டிஐஜி முத்துச்சாமி, போலீஸ் துணை கமிஷனர் செல்வராஜ், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க