• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டி

December 8, 2024 தண்டோரா குழு

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோல்ஃப் விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் விதமாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செஷாயர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை,மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் வகையில் கோயமுத்தூர் கோல்ப் கிளப்புடன் இணைந்து சாரிட்டி கோப்பைக்கான கோல்ஃப் போட்டிகள் நடைபெற்றது.

தொடர்ந்து இரண்டாவது சீசனாக செட்டிபாளையம் பகுதியில் உள்ள கோல்ஃப் கிளப் புல்வெளியில் நடைபெற்ற இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 96 கோல்ப் வீரர்கள் 4 அணிகளாக கலந்து கொண்டனர்.

இது குறித்த செய்தாளர்களிடம் செஷாயர் அறக்கட்டளை துணை தலைவர் வி.ஆர்.நரேன்,கோயமுத்தூர் கோல்ஃப் கிளப் தலைவர் கோபிநாத்,செயலாளர் துரைராஜ்,கேப்டன் அஷ்வின் சந்திரன்,செஷாயர் அறக்கட்டளை பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செய்து வரும் சேவைகள் குறித்து,அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த போட்டி இரண்டாவது ஆண்டாக கோவையில் நடைபெறுவதாகவும்,இனி வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சேரிட்டி கோப்பை கோல்ப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க