• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முக கவசம் வழங்கி பாட்டு பாடி வாக்கு சேகரிக்கும் பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங்

February 14, 2022 தண்டோரா குழு

முக கவசம் வழங்கி ,பாட்டு பாடி வாக்கு சேகரிக்கும் பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங்,இந்த தேர்தலில் 71 வது வார்டு பகுதி மக்கள் தனக்கு வெற்றி வாகை சூடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர் புற உள்ளாட்சி தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து வருகிறது.பல்வேறு முன்னனி கட்சியினர் வித விதமாக பிரச்சாரங்கள் செய்து வரும் நிலையில், இதற்கு தானும் சளைத்தவன் அல்ல என நிரூபிக்கும் வகையில் கோவை 71 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஆனந்த் சிங் பிரச்சாரத்தில் அசத்தி வருகிறார்.

அந்த வகையில் 100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் அனைத்து பகுதி மக்களாலும் டோனி சிங் என அழைக்கப்படும் இவர் 71 வது வார்டு பகுதியான ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் சிங் என்ற டோனி தனது சின்னமான பெட்ரோமாக்ஸ் விளக்கை கையில் ஏந்தியபடி அவரது ஆதரவாளர்களுடன் ஆர்.எஸ்.புரத்தில் வாக்கு சேகரித்தார்.

அந்த பகுதி மக்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கி வாக்கு சேகரித்த டோனி சிங், இந்த தேர்தலில் 71 வது வார்டு பகுதி மக்கள் தனக்கு வெற்றி வாகை சூடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க