October 19, 2022
தண்டோரா குழு
சென்னையை சேர்ந்த தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் மூலம் செல்போன் டவர்கள் கோவையில் பல இடங்களில் அமைக்கப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒரு செல்போன் நிறுவனம் தனது செல்போன் சேவையை நிறுத்தி விட்டன. அதன் பின்னர் அந்த நிறுவனத்தின் உபயோகமற்ற நிலையில் இருந்த செல்போன் டவர், அதன் உதிரிபாகங்கள் பல இடங்களில் மாயமானதாக கூறப்படுகிறது.
தகவலின் பேரில் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி அர்ச்சுனன் (49), சரவணம்பட்டி – துடியலூர் ரோடு, சரவணம்பட்டி – சத்தி ரோட்டில் டவர் இருந்த இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது சுமார் ரூ.46.50 லட்சம் மதிப்பிலான செல்போன் டவர் மற்றும் அதன் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அர்ச்சுனன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.