• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டம்

March 19, 2023 தண்டோரா குழு

கோடை காலம் துவங்கியதை அடுத்து பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக,ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

கோடை காலத்தை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் முதல் அனைத்து மக்களுக்கும் இலவசமாக நீர் மோர் வழங்கும் நடமாடும் தண்ணீர் பந்தல் எனும் அசத்தல் திட்டத்தை துவக்கியுள்ளனர்.விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற, இதற்கான துவக்க விழா காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட மாணவரணி தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

ஆட்டோவில் தாகம் தீர்ப்போம் எனும் சேவையாக துவங்கியுள்ள இதற்கான துவக்க விழா மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஜே.ஆர்.டி. குழுமங்களின் தலைவர் ஜே.ஆர்.டி. ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் நீர் மோர் கேனை வைத்து கொண்டு ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் முதல் அனைத்து மக்களுக்கும் நீர் மோரை இலவசமாக வழங்கி வரும் இத்திட்டத்தை கோவை வாழ் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இதற்கான துவக்க நிகழ்ச்சியில், சுதந்திர மீட்டர் ஆட்டோ நிர்வாகிகள் ராஜபழனி பாலாஜி பஞ்சலிங்கம் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் பொருளாளர் ராஜா துணை தலைவர் மாரிராஜ் இணை செயலாளர் சதீஷ் குமார் இணை செயலாளர் அருண்குமார் அமைப்பாளர் செந்தில்குமார் துணை அமைப்பாளர் சரவணன் ஆலோசகர் ரோஹித் மாவட்ட நிர்வாகி வினோத் குமார் சிங்கை நகர தலைவர் சுரேஷ் செயலாளர் சதீஷ் உறுப்பினர் கருப்புசாமி கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க