• Download mobile app
03 Mar 2025, MondayEdition - 3309
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 1000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான்

March 2, 2025 தண்டோரா குழு

தமிழ்நாடு முதலமைச்சர் 72வது பிறந்த நாளை முன்னிட்டு 1000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் வழங்கினார்.

திராவிட மாடல் நாயகன்,சமூகநீதி பாதுகாவலர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழிகாட்டுதல் படி,மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் ஆலோசனை படி கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் 1000 ஏழை,எளிய மக்களுக்கு தல 5 படி அரசி தனது இல்லத்தில் வழங்கினார்.

மேலும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.மேலும் இதனை தொடர்ந்த ஜாதி மத பேதமின்றி சமூகநீதி அடிப்படையில் 72 ஆலயங்களில் அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறியதாவது’-

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பேரறிஞர் அண்ணா வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72- வது பிறந்த நாளில் மாண்புமிகு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழிகாட்டுதல் படியும்,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனை படி கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவராகிய எனது தலைமையில் 1000 ஏழை, எளிய மக்களுக்கு தல 5 கிலோ அரிசி வழங்கியுள்ளோம்.

இனம் காக்க,மொழி காக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராட காத்துக்கொண்டு உள்ளோம். மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்து மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த வரும் பாசிச ஒன்றிய மைனாரிட்டி அரசின் கனவு தமிழத்தில் பழிக்காத காரணத்தால் இன்று பாராளுமன்ற தொகுதி மறு வரையறை என்ற பெயரில் தென்னிந்தியவையும், குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து வஞ்சிக்க நினைக்கிறது.ஒன்றிய பாசிச வெறி பிடித்த மைனாரிட்டி பாஜக அரசின் கனவு பலிக்காது. என்பதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளில் உறுதி ஏற்றுள்ளோம்.

மேலும் படிக்க