• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 400 வருடங்கள் பழமையான கருப்புராயர் கோவிலின் கும்பாபிஷேக விழா

March 28, 2022 தண்டோரா குழு

கோவையில் 400 வருடங்கள் பழமையான கருப்புராயர் கோவிலின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள சின்னபுத்தூர் நெட்டையங்காட்டு தோட்டத்தில் 400ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ கருப்பராயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

தொடர்ந்து கோவிலின் வளாகத்தில் மங்கள இசை முழங்க இரண்டாம் கால யாக பூஜை,விக்னேஷ்வரா பூஜை,புண்யாகம் பிரம்பசுத்தி,பிம்பரக்ஷய பந்தனம்,நாடி சாந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலை கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ கருப்பராயன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ கன்னிமார்,ஸ்ரீ அக்காண்டியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க