• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 86 பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு

February 18, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக 17 பறக்கும் படைகள் அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 86 பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் நடத்தை விதிகள் மீறல் மற்றும் அவை தொடர்பான புகார்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்களாக
விநியோகம் செய்யப்படுவது தொடர்பான புகார்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் 69 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி
நேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

தற்போது நடத்தை விதிகள் மீறல் மற்றும் அவை தொடர்பான புகார்கள் கூடுதலாக வருவதால் கோவை மாநகராட்சிக்கு 10 பறக்கும் படைகளும், நகராட்சி பகுதிகளுக்கு 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 86 பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க