• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 21ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

April 14, 2022 தண்டோரா குழு

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 21 ஆம் தேதி தொழிற்பழகுனர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, கோவை மாவட்ட அளவில் தொழிற்பழகுனர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம்,கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 21 ஆம் தேதி( வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில், பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.

மேலும்,வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறது.தொழிற்பழகுநர் பயிற்சியின் போது,தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்.சி.வி.டி, எஸ்.சி.வி.டி யின் கீழ் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10,பிளஸ் 1மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோவை என்ற முகவரியில் 9486447178,9442651468, 9840343091 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க