• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங்கை தடுக்க சிறப்பு நடவடிக்கை – டீன் நிர்மலா

November 12, 2022 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் மாணவர்கள் அத்துமீறுவதை தடுக்கும் வகையில், ஆஸ்பத்திரியின் டீன் தலைமையில், பேராசிரியர்கள், போலீசார் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி விடுதி கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் ஆண்கள் 200 பேர், பெண்கள் விடுதி யில் 270 பேர் என 470 பேர் தங்கி படித்து வருகின்றனர்.இவர்களுக்கு ராகிங் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜூனியர் மாணவர்களிடம் வரம்பு மீறி செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர, ராகிங் தடுக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விடுதி மற்றும் கல்லூரியில் ராகிங் தொடர்பான புகார்களை மாணவர்கள் அளிக்க புகார்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ராகிங் கமிட்டியில் உள்ள நபர்களின் மொபைல் எண்கள் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஜூனியர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் விடுதியில் உதவி பேராசிரியர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நடந்து முடிந்துள்ள மருத்துவ மாணவர்கள் கவுன்சிலிங்கை அடுத்து வரும் 15-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.தற்போது வரை முதலாமாண்டில் 177 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.இதில், பலர் விடுதியில் தங்கி படிக்கவுள்ளனர்.இந்த மாணவர்களுக்கும் ராகிங் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க