• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கு பல்நோக்கு மருத்துவ மையம்

March 29, 2023 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பல்நோக்கு மருத்துவ மையம் இன்று தொடங்கப்பட்டது.இங்கு வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 வரை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்க சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சிகிச்சை மையத்தில் தோல்நோய், பிளாஸ்டிக் சர்ஜரி, சிறுநீரக அறுவை சிகிச்சை, மனநோய், மகப்பேறு மற்றும் காது,மூக்கு, தொண்டை டாக்டர்கள் கொண்ட சிறப்பு குழு ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க உள்ளனர்.இதுவரை மூன்றாம் பாலினத்தவர்கள் வெவ்வேறு சிகிச்சைப் பிரிவிற்கு சென்று ஆலோசனை பெறவேண்டி இருந்தது.ஆனால் தற்போது அவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பல்நோக்கு சிகிச்சை மையம் அவர்களின் மருத்துவ தேவையை ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.இந்த சிகிச்சை தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மற்றும் இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது.

மேலும் படிக்க