• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகதிற்கு ஏ டபுள் ப்ளஸ் (A++) தரச்சான்று

February 28, 2022 தண்டோரா குழு

கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றாக ஏ டபுள் ப்ளஸ் (A++)தரம் பெற்று,தேசிய அளவில் பெண்கள் பல்கலைகழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

கோவையில் பழமையான கல்வி நிறுவனமாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.பெண்களுக்கென பிரத்யேக கல்வி நிறுவனமாக செயல்பட்டு வந்த இந்த பல்கலைகழகத்திற்கு அண்மையில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினர்,நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் குழுவினர் வழங்கிய அறிக்கையை தொடர்ந்து,அவினாசிலிங்கம் பல்கலைகழகம் (A++) ஏ டபுள் ப்ளஸ் தரச்சான்று பெற்று கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது. இதில் பல்கலைகழகத்தின் வேந்தர் பேராசிரியர் தியாகராஜன்,நிர்வாக அறங்காவவலர் மீனாட்சி சுந்தரம்,துணை வேந்தர் முனைவர் பாரதி ஹரி சங்கர், பதிவாளர் முனைவர் கவுசல்யா ஆகியோர் பேசினர்.

அப்போது,தேசிய அளவில் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் எனவும் குறிப்பாக பெண்கள் பல்கலைக்கழகத்தில் 3.65 தர புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.குறிப்பாக இந்த தரவரிசை முன்னேற்றத்தால் உயர் கல்வி நிறுவனமாக செயல்பட உள்ள அவினாசிலிங்கம் பல்கலை கழகத்தில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் இது நல் வாய்ப்பாக அமையும் எனவும், இதற்கு காரணமாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மாணவியர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பதாக கூறினர்.

மேலும் படிக்க