• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மர்ம சாவு

February 3, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியை சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் (48). திருமணம் செய்யாமல் தனிமையில் வசித்து வந்தார்.‌இவர் தியாகி குமரன் வீதியில் வெள்ளி பொருட்கள் பாலிஷ் கடை நடத்தினார்.‌

உரிய வாடகை தர முடியாத நிலைமையில் இவரது கடையை மூன்று மாதம் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் விரக்தியில் காணப்பட்ட இவர் அடிக்கடி மது போதையில் கடை மூடியதால் வேலை இழந்துவிட்டதாக நண்பர்களிடம் புலம்பி வந்தார்.

நேற்று இவர் தனது கடைமுன் இறந்து கிடந்தார்.‌ இறப்பிற்கான காரணம் குறித்து பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க