September 24, 2022
தண்டோரா குழு
கடந்த இரு நாட்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
இதையடுத்து, கோவையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், காலியாக இருக்கும் கோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையாளர் பொறுப்புக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதைப்போல், சிங்காநல்லூர் சரக உதவி ஆணையாளராக பணியாற்றும் அருண் சிறப்பு புலனாய்வுப் பிரவு உதவி ஆணையாளராக நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.