November 29, 2024
தண்டோரா குழு
டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா,டாக்டர் ஓ.டி.புவனேஸ்வரன், வரவேற்புரையில்,தலைவர், டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் புதுடில்லியைச் சேர்ந்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உறுப்புச் செயலரும் தலைமை விருந்தினருமான பேராசிரியர் இராஜீவ்குமார் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவின் சிறப்புரையை வழங்கினார்கள்.
நடப்புக் கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கையை,கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ்.யு.பிரபா சமர்ப்பித்தார். கல்லூரிச் செயலாளரும் அறங்காவலருமான டாக்டர் தவமணி.டி.பழனிசாமி,டாக்டர் அருண்.என்.பழனிசாமி ஆகியோர் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துரையை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் வெவ்வேறு பாடப் பிரிவுகளில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட வகுப்புகளில் பயின்ற 567 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.