• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சங்கமேஸ்வரர் திருக்கோயில் தைப்பூச திருத்தேர் திருவிழா

February 10, 2017 தண்டோரா குழு

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோவை சங்கமேஸ்வரர் திருக்கோயில் தைப்பூச திருத்தேர் பவனி பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெற்றனர்.

கோவை மாநகர மையமான டவுன் ஹால் பகுதியில் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் தேதியும் தைப்பூச திருநாளன்றும் திருத்தேர் பவனி நடைபெறும்.

தைப்பூச திருநாளை முன்னிட்டு அத்திருக்கோவிலிலிருந்து பவனி நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க பவனி தொடங்கியது.

தேர்ப்பவனி ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டைமேடு, உக்கடம், என்.எச் சாலை வழியாக உலா வந்து, மீண்டும் திருக்கோவில் முன்பாக நிறைவடைந்தது.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் கோட்டைமேடு பகுதியில் தேர்ப் பவனி செல்வதற்கு அந்த சிறுபான்மை மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்த தேரோட்டம் கடந்த 5 ஆண்டுகளாகப் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி வெள்ளியன்று தேரோட்டம் நடைபெற்ற பாதையில் 360 டிகிரி கோணமுடைய கண்கானிப்பு கேமரா மூலம் நூற்றுக்கனக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க