• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சிபிஎம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

July 5, 2017 தண்டோரா குழு

கோவை காந்திபுரத்தில் சி.பி.எம் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் தலைமறைவாக உள்ள ஓருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை காந்திபுரம் 100அடி சாலையில் சி.பி.எம் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி அதிகாலை மர்மநபர்கள் இரு பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர்.அது அங்கிருந்த கார் மீது விழுந்து வெடித்தது. பெரிய அளவில் சேதம் இல்லை என்றாலும் சி.பி.எம் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில் இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தலைமறைவாக நபரை பிடிக்க தனிப்படை காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கைது சரவணக்குமார் இந்து அமைப்பு ஒன்றில் உறுப்பினராக இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீஸ் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க