• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி

February 14, 2023 தண்டோரா குழு

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகிறது. வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.அதன் ஒரு பகுதியாக பேரூர் படித்துறையில் விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 25ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் பெயர்களை சொல்லி திதி கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்த அமைப்பை சேர்ந்த சிவலிங்கம் கோட்டச் செயலாளர் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ரவிந்திரன் மாத்ரு சக்தி இணை அமைப்பாளர் கௌசல்யா விக்னேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளிங்கிரி செல்வபுரம் பிரகண்டச் செயலாளர் திருப்பதி ராம் நகர் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க