• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை போத்தனூர் அருகே வீட்டில் வளர்க்கப்பட்ட சந்தன மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தல்

June 9, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் போத்தனூரை அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். இவருக்கு வயது 85. இவர் தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் இரண்டு சந்தன மரங்களை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு நஞ்சம்மாள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு சந்தன மரங்களையும் வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.

காலை விடிந்ததும் தோட்டத்திற்கு வந்து பார்த்த நஞ்சம்மாள் சந்தன மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் இச்சம்பவம் குறித்து நஞ்சம்மாள் போத்தனூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போத்தனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தன மரங்களை வெட்டி கடத்திய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க