• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியில் 3390 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை

March 10, 2023 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பாதிப்பு இருந்து வருகிறது. இதையடுத்து, காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கண்டறிய சிறப்பு பொது மருத்துவ முகாம் கோவை மாநகராட்சியில் நடத்தப்பட்டது. அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் 35 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘ கோவை மாநகராட்சியில் 35 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் 3390 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 92 பேருக்கு காய்ச்சல் மற்றும் சளி கண்டறியப்பட்டது. 30 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 10 பேரை காய்ச்சல் தொடர்பாக அரசு மருத்துவமனை அல்லது அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்,’’ என்றார்.

 

மேலும் படிக்க