February 26, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 32 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும், 24 துணை சுகாதார நிலையங்களிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவமனைகளிலும், 50 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும், 137 அங்கன்வாடிகள் மற்றும் மண்டபங்களிலும், 10 மொபைல் முகாம்களிலும், 11 டிரான்ஸிட் முகாம்கள் (ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில்) மற்றும் 80 பிற இடங்கள் என மொத்தம் 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது.
போலியோ செட்டு மருந்து முகாம்களில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். எனவே போலியோ சொட்டு மருந்து தினத்தன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.