• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி சாலைகளில் விரைவில் மிதிவண்டி பாதை

November 12, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரைவில் மிதிவண்டி பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டின் தன்னார்வ அமைப்புடன் ஒன்றிய அரசு இணைந்து இந்தியாவில் ஒடிசா, கொச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை கிராஸ்கட் சாலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோதனை ஒட்டமாக 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி செல்வதற்காக பிரத்யேக பாதை மற்றும் நடைபாதைகளில் மக்கள் செல்வதற்காக வண்ண நடைபாதை, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவை அமைக்கப்பட்டன.

இந்த பாதைகள் சோதனை ஓட்டமாக 10 நாட்களுக்கு மக்கள் பயன்படுத்தினர். இதனிடையே, மாநகராட்சி சார்பில் நிரந்தரமாக இப்பாதைகள் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கோவை மாநகரில் நெரிசல் நிறைந்த பெரியகடை வீதி, ராஜவீதி, வடவள்ளி, துடியலூர், சாய்பாபா காலனி போன்ற இடங்களில் இத்திட்டம் விரைவில் மிதிவண்டி பாதை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன என்றார்.

மேலும் படிக்க