July 30, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் 5 வது மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை மேயர் கல்பனா ஆந்த்குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தனர்.
இக்கூட்டத்தில் இரண்டு மாத சஸ்பெண்ட் முடிந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் இந்த மாமன்ற கூட்டத்தில் கருப்பு சட்டை அணியாமல் வெள்ளை நிற உடையுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது இது முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.