• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் நாளை 28 வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

April 29, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை (சனிக்கிழமை) சிறப்பு மாபெரும் கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாம் நடத்திட தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி கோவை மாவட்டத்தில் 1515 இடங்களில் தடுப்பூசிகள் வழங்கிட மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 325 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 27 லட்சத்து 78 ஆயிரத்து 885 நபர்களுக்கு முதல் தவணையும், 24 லட்சத்து 97 ஆயிரத்து 706 நபர்களுக்கு இரண்டாம் தவணையும், 15-18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 195 முதல் தவணையும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 544 இரண்டாம் தவணையும், 12-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 69 ஆயிரத்து 531 முதல் தவணையும், 14 ஆயிரத்து 730 இரண்டாம் தவணையும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் இடங்களை பொதுமக்கள் மாவட்ட இணையதளம் coimbatore.nic.in வழியாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க