• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ராஜவீதியில் 1.5 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

June 21, 2023 தண்டோரா குழு

கோவை ராஜவீதியில் லாரிமூலம் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் கவர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையில் மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக பல்வேறு கடைகள், சாலையோர கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் இருந்து லாரி மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை ரகசிய தகவலின் அடிப்படையில் ராஜவீதியில் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதில் ஒன்றரை டன் பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, இந்த பிளாஸ்டிக் கவர்கள் யாருக்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க