• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வங்கியில் ரூ.10.73 கோடி மோசடி – மேலாளர் உள்பட 8 பேர் கைது

February 11, 2022 தண்டோரா குழு

கோவை வங்கியில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.10.73 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (39) என்பவர் போலியான ஐவுளி ஆலைகளின் ஆவணங்களை தயார் செய்து, கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வங்கி மேலாளர் ராஜேஷ் (48) என்பவரின் உதவியுடன் ரூ.10.73 கோடி கடனாக பெற்றார். மேலும் வாங்கிய கடனுக்கு முறையாக வட்டியும், அசலும் கட்ட தவறினார்.

இது குறித்து வங்கியின் மூத்த மேலாளர் ஜெகன்குமார் வங்கியின் மேலாளரிடம் கேட்டார். அப்போது கடனாக பெற்ற ஆவணங்களை ஜெகன்குமாரிடம் மேலாளர் வழங்கினார். அதனை ஆய்வு செய்தபோது ஜெகன்குமார் வழங்கிய 17 ஆவணங்கள் போலியான ஆவணங்கள் என்பதும், இல்லாத ஜவுளி மில்களின் பெயரில் ஆவணங்களை தயாரித்து வங்கியில் ரூ.10.73 கோடி கடன் பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து கனகராஜ் மீதும், இதற்கு உடந்தையாக வங்கி மேலாளர் ராஜேஷ் மீதும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் வங்கியின் மூத்த மேலாளர் ஜெகன்குமார் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வங்கி மேலாளர் ராஜேஷ்,கனகராஜ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த கோவையை சேர்ந்த கார்த்திகேயன், ராதிகா, சம்பத்குமார், துரைராஜ், மகேஸ்வரி, ராஜூ ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் படிக்க