• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு!

June 15, 2017 தண்டோரா குழு

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பெங்களூரு சிறையில்இருக்கும் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் அதிமுக துணைப் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து வருகிறார்.டெல்லி சிறையில் இருந்து விடுதலையான பிறகு சசியை தினகரன் சந்திப்பது 2-வது முறை ஆகும்.

அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்தும் எம்.எல்.ஏக்களின் வீடியோ விவகாரம் குறித்தும் ஆலோசிக்க சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில்,தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில்முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சந்திப்பில் தினகரனை ஆதரிக்கும் 34 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாலை 5மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க