• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலா, டிடிவி தினகரனின் பேனர்கள் அகற்றம்

April 26, 2017 தண்டோரா குழு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திலிருந்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ், தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சசிகலா குடும்பத்தை வெளியேற்றி, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓ.பி.எஸ் அணி அறிவித்தது.

இந்நிலையில் அ.தி.மு.க, தலைமை அலுவலகத்தில் உள்ள, சசிகலா படங்களை அகற்ற வேண்டும் என ஓ.பி.எஸ் அணியை சார்ந்த மதுசூதனன் நேற்று அறிக்கை விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று காலை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க, தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டது. அங்கு ஜெயலலிதா படம் மட்டுமே இடம்பெற்ற புதிய பேனர்கள் வைக்கப்பட்டது.

மேலும் படிக்க