• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டபேரவையில் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம்

January 24, 2017 தண்டோரா குழு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் பன்னீர்செல்வம் வாசித்தார்.

அப்போது முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நாளான டிசம்பர் 5 ம்தேதி தமிழகத்தின் இருண்ட நாள் ஆகும். தனது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. தன்னுடைய திறமையாலும், பணிகளாலும் அனைவரின் அன்பைப் பெற்றவர். தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதலிடத்திற்குக் கொண்டுவர பாடுபட்டவர். தமிழக சட்டப் பேரவையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றவர் எனக்கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை ஆளும் கட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப் பாடுபட்டவர் ஜெயலலிதா. எதற்கும் அஞ்சாமல் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றவர்” என்றார்.

காங்கிரஸ் சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துப் பேசினர்.

இதையொட்டி, அவையில் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க