• Download mobile app
15 Apr 2025, TuesdayEdition - 3352
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

April 14, 2025 தண்டோரா குழு

“நம் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் மண், காற்று மற்றும் நீருக்கு நன்றியை வெளிப்படுத்தும் காலமாக தமிழ் புத்தாண்டு நாள் அமையட்டும்” என ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புத்தாண்டு என்பது பூமியின் அனைத்து உயிர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடிய சூரிய ஒளியின் தீவிரம் வடக்கு அரைக்கோளத்தில் அதிகரிக்கும் ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது.

அதிகப்படியான பசுமையும் நிழலும் இருந்தால் கோடையின் வெப்பம் அவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்காது. இது மனிதர்களுக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும் நிம்மதியைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது மண்ணை வளமாக வைத்திருக்கும்.

புதுப்பித்தல் மற்றும் மீளுருவாக்கத்தின் இடைவிடாத சுழற்சிகளில் இருக்கும் மண், காற்று மற்றும் நீர் ஆகிய அடிப்படை கூறுகளுக்கு நன்றி செலுத்தி கொண்டாட வேண்டிய நேரம் இது. அவை அவ்வப்போது வாழ்க்கை புதிதாக மலர்வதை உறுதி செய்கின்றன. இந்த புத்தாண்டில், நீங்கள் மலர்வதற்கு இந்த இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.” எனக் கூறியுள்ளார்

மேலும் படிக்க