• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சத்தி சாலையில் இருசக்கர வாகனம் அரசு கழிப்பிட சுவற்றில் மீது மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

April 25, 2022 தண்டோரா குழு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(21)அதே ஊரை சேர்ந்த ஸ்ரீஜித்(25). இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் மில்லில் பணியாற்றி வந்தனர்.இவர்கள் இருவரும் அன்னூரை சேர்ந்த தங்களது நண்பரான லூர்து சகாயராஜ்(25) என்பவருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் அன்னூர்-சத்தி சாலையில் விளையாட்டாக வளைத்து, வளைத்து ஓட்டியவாறு அதிக வேகமாக சென்றுள்ளனர்.

அப்போது,சத்தி சாலையில் உப்புத்தோட்டம் கட் ரோடு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக இருந்த அரசு பொதுக்கழிப்பிட சுவற்றில் பயங்கரமாக மோதியது. இதில் கழிப்பிடத்தில் இருந்த மூதாட்டி லட்சுமி(60) படுகாயமடைந்தார்.

மேலும் இந்த விபத்துல் படுகாயமடைந்த கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித் உள்ளிட்ட இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தனர்.மேலும் படுகாயமடைந்த லூர்து சகாயராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க