• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சந்தர்ப்பவாத அரசியலே ஒதுங்கு – கோவையில் முதல்வரை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் !

August 4, 2024 தண்டோரா குழு

கோவைக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று பிரம்மாண்ட போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கோவையில் ஆக. 9 ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்ற மாணவா்கள், அதேபோல, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவா்கள், தங்களின் இளநிலை கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமோ, ஐடிஐ, இளநிலை, முதுநிலை இணைந்த படிப்புகளை தொடருவதற்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், முதல்வர் வருகையை ஒட்டிய கோவையில் முதல்வர் முக ஸ்டாலினை வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 80 வது திமுக கவுன்சிலர் மற்றும் பொது சுகாதார குழு தலைவர் மாரி செல்வன் சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் பாசிச அரசியலே பதுங்கு; சந்தர்ப்பவாத அரசியலே ஒதுங்கு சமூக நீதி நாயகர் வருகிறார் என்ற வசனம் எழுதப்பட்டுள்ளது.

மேலும் படிக்க