February 18, 2017
தண்டோரா குழு
சென்னை: சனிக்கிழமை காலை 11 மணி அளவில் சட்டப் பேரவை கூடியது. அவை கூடியதும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் தி.மு.க. உறுப்பினர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் வாக்கெடுப்புத் தேதியை மாற்ற வேண்டும் என்றும் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மதியம் ஒரு மணி வரை சட்டப்பே ரவை ஒத்திவைக்கப்பட்டது. பி்ன்னர் சட்டப் பேரவை கூடியதும் சட்டப் பேரவைத் தலைவர் தனபால் பேசுகையில், “சட்டப்பேரவையில் எனக்கு நடந்த கொடுமையை நான் எங்கு சென்று முறையிடுவது என் சட்டையைப் பிடித்து திமுகவினர் இழுத்தனர். சட்டப்பேரவை விதிகளின்படிதான் அவையை நடத்த முயற்சி செய்தேன்” வருத்தத்துடன் கூறினார்.
மீண்டும் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் வாக்கெடுப்பு தேதியை மாற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.