June 13, 2017
தண்டோரா குழு
ஐஐடி நுழைவுத் தேர்வில், சமோசா விற்பவரின் மகன், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் ஐஐடி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதன்படி, நடப்பாண்டில் நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதில், ஐதராபாத்தைச் சேர்ந்த சமோசா விற்கும் சுப்பாராவின் மகன் மோகன் அப்யாஸ், அகில இந்திய அளவில் 64-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதுகுறித்து மோகன் அப்யாஸ் கூறுகையில்,
முதல் 50 இடங்களுக்குள் வந்துவிடுவேன் என்று நினைத்தேன். அதனால், முடிவுகள் வெளியானவுடன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால், இப்போது சந்தோஷமாக உணர்கிறேன்.ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறையில் ஆய்வு பட்டம் படிக்க உள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் தன்னுடைய முன்னுதாரணம் என தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வெற்றிக்கு காரணமான தனது பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான் என்று கூறினார்.