• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதாரண படகில் உலகம் சுற்ற தாயாராகும் கடற்படை வீரர்

August 9, 2017 தண்டோரா குழு

கோவா மாநிலத்தை சேர்ந்த இந்தியா கடற்படை வீரர் டாமி, 2018-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகம் முழுவதும் கப்பலில் சுற்றி வரும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கு அவர் மரப்பலகையால் செய்யப்பட்ட சாதராண படகையே உபயோகப்படுத்த உள்ளார்.

1968-ம் ஆண்டு, சர் ராபின் நாக்ஸ் ஜான்ஸ்டன் என்பவர் தனியாக உலகம் முழுவதும் பயணித்து வந்தார். அதேபோல், அந்த போட்டியில் பங்கேற்பவர்கள் தனியாக தான் பயணம் செய்யவேண்டும் என்பது விதிமுறை.

கடந்த முறை நடைபெற்ற போட்டியில் டாமி நவீன கப்பல் மூலம் உலக பயணம் மேற்கொண்டார். ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில், ‘துறையா’ என்னும் மரப்படகை பயன்படுத்தி செல்லத் திட்டமிட்டுள்ளார்.

அவருடைய படகில் ஜிபிஎஸ் சேவையோ, செயற்கைக்கோள் தொலைபேசியோ, மற்ற மின்னணு கருவியோ அல்லது பாக்கெட் கால்குலேட்டரோ இருக்காது. கப்பல் பயணத்திற்கு காகித வரைபடங்கள் மட்டுமே இருக்கும்.

இங்கிலாந்தின் ப்ளைமௌத் என்னும் இடத்தில் இருந்து இந்த போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க